Perfect-ஆ ஒரு விஷயத்தை செய்வது எப்படி? நம்மை அடுத்த லெவலுக்கு கொண்டு போவது எப்படி?

 Perfect-ஆ ஒரு விஷயத்தை செய்வது எப்படி?  நம்மை அடுத்த லெவலுக்கு கொண்டு போவது எப்படி?


எல்லோருக்குமே தான் செய்கிற   எல்லாக் காரியத்தையும் பர்ஃபெக்ட்டா செய்யணும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் நாம் அப்படி நினைத்து நினைத்து செய்தே காரியத்தை சொதப்பி வைத்துவிடுவோம்.

நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன்.ஒரு பர்ஃபெக்ட்டான பாடகர் யார்?ஒரு பர்ஃபெக்ட்டான எழுத்தாளர் யார்? பர்ஃபெக்ட்டான டைரக்டர் யார்? இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடம் நிச்சயம் பதில் இருக்கும்.யுவன் சங்கர் ராஜா, எழுத்தாளர் ஜெயகாந்தன், டைரக்டர் சங்கர்.இவர்களெல்லாம் பர்ஃபெக்ட்டாக தங்கள் தொழிலை செய்பவர்கள் தானே? ஆனால் இவர்களின் ஆரம்பகாலம் எப்படி இருந்திருக்கும் உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு புரியும் படி உதாரணத்துடன் சொல்கிறேன்.உங்களுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை கண்டிப்பாக தெரிந்திருக்கும்.அவரிடம் ஒரு இன்டர்வியூவில் நீங்கள் முதன்முதலில் பாடிய பாட்டு எதுவென்று கேட்பார்கள்.அதற்கு அவர் "அய்யோ அந்த பாட்டா, அதை இப்போ பாடுனா ரெம்ப கேவலமா இருக்கும்.ஆனா அதை நான் முதலில் பாடி முடிச்சப்போ, நான் தான் இந்த உலகத்துலயே பெரிய composerங்கிற மாதிரி feel பண்ணேன்" என்று சொல்வார்.

இதோ அவர் முதன்முதலில் பாடிய பாடல் உங்களுக்காக...


மாடு தாண்டா பால கறக்கும்...

அந்த பாலு இங்க தயிரா மாறும்...

தயிர்ல இருந்து வெண்ணெய் கிடைக்கும்...

அந்த வெண்ணெய் அப்புறம் நெய்யா மாறும்...


இது தான் அந்த பாட்டு.இந்த பாட்டை அவர் தான் பாடினார் என்று சொன்னால் நமக்கே சிரிப்பு வருகிறது இல்லையா? அந்த நிகழ்ச்சியில் இதைப் பாடிவிட்டு அவரும் சிரிப்பார்.


சரி, இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இவ்வளவு மொக்கையான பாட்டை எல்லாம் பாடியவரா விஜய் ஆண்டனி என்பது அல்ல.இவ்வளவு பிரபலமான விஜய் ஆண்டனியும் ஆரம்பத்தில் இதுபோன்ற மொக்கையான பாடல்களை தான் பாடியிருக்கிறார் என்பது தான்.ஒவ்வொரு creator-க்கும் ஆரம்பம் இப்படி மொக்கையாகத் தான் இருக்கும்.இது பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் துறை creator-களுக்கும் இது பொருந்தும்.

நான் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.ஆரம்பத்தில் என்னிடம் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற ஐடியா மட்டும் தான் இருந்தது.அடுத்தது இரண்டு தலைப்பை போட்டு நான்கு பக்கங்கள் எழுதினேன்.அதை எழுதியதும் விஜய் ஆண்டனி மாதிரியே 'உனக்குள்ளும் ஒரு எழுத்தாளன் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறான்' என்று அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு.ஆனால் அந்த 4 பக்கங்களுக்குப் பிறகு அடுத்து என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.எழுதியதையே திரும்பத்திரும்ப எழுதுவது மாதிரி இருந்தது.கொஞ்சம் கேப் விழுந்தது.நான் நிறைய புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.திரும்பவும் எழுத ஆரம்பித்தேன்.நான் ஏற்கனவே எழுதியதில் நிறைய திருத்தங்கள் வேறு.இப்போது வரை என்னிடம் 40 பக்கங்கள் இருக்கின்றன.நான் ஆரம்பத்தில் எழுதியதை எல்லாம் இப்போது புரட்டிப்பார்த்தால் எனக்கே சிரிப்பு தான் வரும்.எல்லாம் மொக்கையாக எழுதியிருப்பேன்.ஆனால் இப்போதும் கூட நான் எல்லாமே பர்ஃபெக்ட்டாக எழுதிவிட்டேனா என்று கேட்டால் இன்னும் இல்லை.நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கே நான் சொல்லவருவது என்னவென்றால் பர்ஃபெக்ஷன் என்பது ஒரு பெரிய process.அது எடுத்த உடனேயெல்லாம் எவருக்கும் வந்துவிடாது.எல்லாம் போகப்போகத் தான் வரும்.அய்யய்யோ நாம் செய்தது நன்றாக வரவில்லையே என்று நீங்கள் அதை அப்படியே விட்டுவிட்டால், உங்களிடம் பர்ஃபெக்ஷன் எப்போவுமே வராது.நீங்கள் செய்வது தப்பாகவே, மொக்கையாகவே இருந்தாலும் சரி நீங்கள் அதை செய்துகொண்டே இருக்க வேண்டும்.போகப்போக உங்களுக்கே ஒரு தெளிவு கிடைத்துவிடும், அட இதை இப்படித்தான் செய்ய வேண்டுமா? என்று.

இன்றைய பிரபல பாடகர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் உட்பட எல்லா creator-களுமே இதைச் செய்தவர்கள் தான்.

எனக்கு பர்ஃபெக்ட்டான கேமரா இருக்க வேண்டும், மைக் இருக்க வேண்டும்  அப்போது தான் நான் youtube channel ஆரம்பிப்பேன் என்று நீங்கள் சொன்னால், நீங்கள் கடைசிவரை உட்கார்ந்தே இருக்க வேண்டியது தான்.இப்போதுள்ள பிரபல youtuber-கள் எல்லோருமே ஆரம்பத்தில் போன் கேமராவையும், வாய்ஸ் ரேகார்டர்யும் பயன்படுத்தித் தான் இன்று DSLR camera, மைக் செட் அப், ஸ்டூடியோ என்று முன்னேறி இருக்கிறார்கள்.இப்போது உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்தே நீங்கள் ஆரம்பித்தால் தான் உங்களிடம் சீக்கிரமே புது மாடல் கேமரா, மைக்கை எல்லாம் வாங்க முடியும்.பர்ஃபெக்ட்டான ஒரு வீடியோவை உங்களால் கொடுக்க முடியும்.அதற்கு முன்பே அவசரப்பட்டால் எதுவும் நடக்காது.இந்த youtube channel என்பதை ஒரு உதாரணத்திற்கு தான் நான் சொன்னேன்.இது எல்லா creator-க்கும் பொருந்தும்.


எல்லாமே உடனே நடந்தாக வேண்டும் என்ற அவசர புத்தியால் தான் இன்று நிறைய creator-கள் உருவாகாமலே போய்விடுகிறார்கள்.


-இன்னும் வரும்....


கருத்துகள்